#BREAKING : பீனிக்ஸ் பறவை போல் வடிவமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் முன்னிலையில் முதலமைச்சர் இன்று பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். மெரினா கடற்கரையில் 50,422 சதுர அடியில் ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவத்தில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.