வீடு வீடாக வரும் ரேஷன் பொருட்கள் – தொடங்கி வைத்தார் ஆந்திர முதல்வர்!

இனி ரேஷன் கடையில் காத்திருக்க வேண்டாம், வீடு வீடாக வரும் ரேஷன் பொருட்கள் திட்டத்தி ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார்.

ஆந்திரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலின் போது தான் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரும் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள், அதில் ஒன்றாக நகரும் ரேஷன் கடை திட்டத்தை இன்று ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

தனி தனியாக ஒவொருவரின் வீட்டுக்கும் சென்று ரேஷன் பொருட்களை வழங்குவதற்காக 830 கோடி ரூபாய் செலவில் நகரும் 9,260 வாகனங்கள் செயல்படுத்தப்படவுள்ளது. ஆந்திர மணிலா முதல்வரின் இந்த திட்டத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

author avatar
Rebekal