ரஷ்யா – அமெரிக்கா இடையே நேரடி போர் ஏற்படும்…!சவால் விடும் எம்.பி.க்கள் …!

நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்க  அதிபர் ட்ரம்ப் கூறும்போது, ‘‘சிரியா மீது ஏவப்படும் எல்லா ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்துவோம் என்று ரஷ்யா கூறியுள்ளது. தயாராக இரு ரஷ்யா. ஏனெனில் அமெரிக்க ஏவுகணைகள் வரும். ரசாயன வாயுவை செலுத்தி சொந்த நாட்டு மக்களை அழித்து மகிழ்ச்சி காணும் விலங்குடன் (சிரிய அதிபர் ஆசாத்) நீங்கள் கூட்டாக செயல்படக் கூடாது’’ என்று கூறியுள்ளார்.

ட்ரம்ப்பின் மிரட்டலுக்கு ரஷ்ய எம்.பி.க்கள் கூறும்போது, ‘‘சிரியா மீது அமெரிக்கா ஏவுகணைகள் வீசினால், அதை போர் குற்றமாக ரஷ்யா கருதும். அதன்பிறகு ரஷ்யா – அமெரிக்கா இடையே நேரடி போர் ஏற்படும்’’ என்று பதிலுக்கு எச்சரித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment