#BreakingNews : நெருங்கும் சட்டமன்ற தேர்தல் ! பிரதமரை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி

Default Image

டெல்லியில்  பிரதமர் மோடியை நேரில் சந்தித்துள்ளார் ,தமிழக முதல்வர் பழனிசாமி.

நேற்று பிரதமர் மோடியை சந்திக்க இரண்டு நாள் பயணமாக தமிழக முதல்வர் பழனிசாமி டெல்லி சென்றடைந்தார்.முதல்வர் பழனிசாமியுடன்,தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார் முதலமைச்சர் பழனிசாமி.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்துள்ளார் , முதல்வர் பழனிசாமி .டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.   தமிழகத்துக்கு பேரிடர் நிவாரணம் போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல் கூறப்படுகிறது.தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில்,இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.அரசியல் ரீதியில் கூட்டணி விவகாரங்கள் ,தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது.மேலும் முதலமைச்சர் பழனிசாமி இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலாவை சந்திக்கிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்