பொறுப்பானவர் புகைப்பிடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை – கர்நாடக அமைச்சர் எதிர்ப்பு!

Default Image

பொறுப்பான பணிகளை செய்யக்கூடிய நடிகர் யாஷ் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும், அவரது புதிய படமான கேஜிஎப் 2 படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் நீக்கப்பட வேண்டும் எனவும் கர்நாடகா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வெற்றிபெற்ற கேஜிஎப் படத்தின்  தொடர்ந்து கேஜிஎப் 2 படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க கூடிய நடிகர் யாஷ் புகைபிடிப்பது போன்ற டீசர் ஒன்று அண்மையில் வெளியாகியது. அதில் யாஷ் எந்திர துப்பாக்கியில் சிகரெட் பற்றவைத்துப் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த டீசர் அதிக பார்வையாளர்களை பெற்று தென்னிந்திய சினிமாவின் முதல் இடத்தையும் பிடித்து இருந்தது. இந்நிலையில் இந்த டீஸருக்கு கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பொறுப்பான பணிகளைச் செய்யக்கூடிய நடிகர் யாஷ் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும், அவரது புதிய படம் ஆகிய கேஜிஎப் 2 படத்தில் அவர் சிகரெட் பிடிக்கக் கூடிய காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் நடிகர்களை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின்பற்றுவது போல அவரது ரசிகர்களும் அவரை பின் தொடர்வார்கள். இதுபோன்ற காட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், புகைப்பிடிக்கும் காட்சிகளை நீக்குவது சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் விஷயமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். அரசின் இந்த கருத்து அனைத்து படங்களுக்கும் பொருந்தும் எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்