#Be Alert:அடுத்த 4 நாட்களுக்கு கனமழை கொட்டும்; எச்சரிக்கும் சென்னை வானிலை மையம்

Default Image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது.அந்தவகையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது.இந்நிலையில் இன்று முதல் அடுத்த நான்கு நாடகளுக்கு தமிழகத்தில் கனமழை மழை இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கடலூர், நாகை,மயிலாடுதுறை ,விழுப்புரம், உள்ளிட்ட சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் ,ஏனயை கடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னை,புதுச்சேரி,காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

105 ஆண்டுகளுக்கு பிறகு:

சென்னையில் கடந்த மூன்ற நாட்களாக நல்ல கனமழை பெய்து வருகிறது,இந்த மழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 105 ஆண்டுகளுக்கு பிறகு, ஜனவரி மாதத்தில் நேற்றுதான் அதிக அளவு மழை பெய்துள்ளது என்று வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்