டெல்லியில் கன்று குட்டியை அடித்த நபர் மீது எப்ஐஆர் வழக்குப்பதிவு!

டெல்லியில் கன்றுக்கட்டியை அடித்த நபர் மீது எப்ஐஆர் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
டெல்லி கிழக்கு பகுதியில் கன்று குட்டி ஒன்றை ஒருவர் அடிப்பது குறித்த வீடியோ இணையதள பக்கங்களில் வைரலாகியுள்ளது. இதனையடுத்து பலரும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதன் பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்த நிலையில் கிடந்த கன்றுக்குட்டியை காப்பாற்றி மருத்துவ பரிசோதனைக்காக அருகிலிருந்த சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு கன்றுக்குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், புதா மார்க் மண்டவாலியில் வசிக்கும் கமல் சிங் என்பவர்தான் கன்றுக்குட்டியை அடித்தவர் என தெரியவந்துள்ளது. எனவே அவர் மீது எப்ஐஆர் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து மேலும் அவரிடம் இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025