Big News : சகாயம் ஐ.ஏ.எஸ் அரசு பணியிலிருந்து விடுவிப்பு.!

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்து இருந்தார், 3 மாதம் காலம் முடிந்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த 7 ஆண்டுகளாக தமிழக அறிவியல் நகர துணைத்தலைவர் பொறுப்பில் பணயாற்றி வந்தார். 57 வயதான சகாயம் ஐ.ஏ.எஸ் ஓய்வு பெற இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் விருப்ப ஓய்வு பெற்று செல்கிறார்.

மதுரை ஆட்சியாளராக இருந்தபோது தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் கிரானைட் முறைகேடு பற்றிய பல தகவல்களை வெளிக்கொண்டு வந்தவர் சகாயம் ஐ.ஏ.எஸ்.

author avatar
Castro Murugan