முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டா சிங் காலமானார்

Default Image

காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பூட்டா சிங் காலமானார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பூட்டா சிங் இன்று காலமானார் என்று செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.

இவர், அகாலிதள உறுப்பினராக தனது முதல் தேர்தலில் போராடி 1960 களில் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். ராஜஸ்தானின் சாத்னா தொகுதியில் இருந்து 1962 இல் மூன்றாவது மக்களவையில் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி வருத்தத்தைத் தெரிவித்ததோடு அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல் என்று  ட்வீட் செய்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் சிங்கின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து, தேசம் இன்று ஒரு விசுவாசமான அரசு ஊழியரை இழந்துவிட்டது என்று கூறினார். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்