அஜித், ஜோதிகா, பார்த்திபன், தனுஷ், அனிருத் ஆகியோருக்கு டிடிவி தினகரன் பாராட்டு!

Default Image

அஜித், ஜோதிகா, பார்த்திபன், தனுஷ், அனிருத் ஆகியோருக்கு டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கான தாதா பால்கே விருது பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் திரையுலகை சேர்ந்த அன்புக்குரிய அஜித்குமார், பார்த்திபன், தனுஷ், ஜோதிகா, அனிருத் ஆகியோருக்கு எனது பாராட்டுகள் என்று அம்மா முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், திரைத்துறையில் தமிழகம் பெருமைபடத்தக்க மேலும் பல சாதனைகளை அவர்கள் புரிந்திட வேண்டுமென வாழ்த்துகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்திய திரைப்பட துறையினரால் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படக் கூடிய விருதான தாதா சாகேப் பால்கே விருது. அதன்படி, 2020 ஆம் வருடத்திற்கான சிறந்த நடிகராக நடிகர் தனுஷ், பன்முக ஆற்றல் கொண்டவராக அஜித்குமாருக்கு சிறப்பு விருதும், சிறந்த நடிகைக்கான விருது ராட்சசி படத்தில் நடித்த ஜோதிகாவுக்கும், சிறந்த இயக்குனருக்கான விருது ஒத்த செருப்பு படத்தை இயக்கிய பார்த்திபனுக்கும், அனிருத் ரவிச்சந்திரன் சிறந்த இசையமைப்பாளருக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்