கடன்மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபிக் ஷா சுப்ரமணியத்தை ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு…!

Default Image

சென்னை உயர்நீதிமன்றம்  கடன்மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபிக் ஷா சுப்ரமணியத்தை ஜாமீனில் விடுவிக்க மறுத்துவிட்டது.

சுபிக் ஷா நிறுவனம், 300க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுக்கு 40 கோடி ரூபாய் வரை திருப்பி செலுத்தவில்லை என்றும், நிதி நிறுவனம் தொடங்கி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை 150 கோடி ரூபாய் வரை ஏமாற்றியதாகவும் புகார் எழுந்தது.

இந்நிலையில் 13 வங்கிகளிடம் 750 கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கில் சுபிக் ஷா சுப்பிரமணியன் அமலாக்கத் துறை கைது செய்தது. இந்த வழக்கில் சுபிக் ஷா சுப்பிரமணியத்தின் ஜாமீன் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்