பா.ஜ.க.வினர் கொல்கத்தாவில் மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிர்ப்பு…!

Default Image

பா.ஜ.க.வினர் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினர். உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுத்தாக்கலுக்கான அவகாசத்தை முதலில் நீட்டித்த தேர்தல் ஆணையம் பின்னர் இந்த உத்தரவை ரத்து செய்தது.

மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஒருதலைப்பட்சமாக இருப்பதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. இதனை வலியுறுத்தி மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தின் முன்பாக அக்கட்சியின் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். கையில் துடைப்பத்துடன் போராட்டம் நடத்திய பா.ஜ.க.வினரை போலீஸார் கைது செய்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்