ஒடிசா புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜ் கோவில் மாதங்களுக்கு பின் மீண்டும் திறப்பு!

Default Image

ஒன்பது மாதங்களுக்குப் பின் ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜ் கோயில் பக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் செல்பவர்களுக்கு கோவிட்-19 எதிர்மறை சான்று கட்டாயம்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்தியா முழுவதும் பொது முடக்கம் அமலில் இருந்தது.

இந்நிலையில்,  சமீபகாலமாக பொது முடக்கத்தில் இருந்து தாளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், பிரசித்தி பெற்ற கோவில்கள் ஆலயங்கள் மற்றும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஒன்பது மாதங்களுக்குப் பின் ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜ் கோயில் கிட்டத்தட்ட பக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முதல் நாளில் சேவையாளர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜனவரி 3-ஆம் தேதி முதல் நகரவாசிகள் லார்ட்ஸ் தரிசனம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் செல்ல கோவிட்-19 எதிர்மறை சான்று கட்டாயம் என்று புவனேஸ்வர் நகராட்சி தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்