38-வது மாவட்டமாக உதயமாகிறது மயிலாடுதுறை!

தமிழகத்தில் மொத்தம் 37 மாவட்டங்கள் இருந்த நிலையில், இன்று 38-வது மாவட்டமாக உதயமாகிறது மயிலாடுதுறை. காணொளி காட்சி மூலம் புதிய மாவட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி. 

தமிழகத்தில் மொத்தம் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி மாவட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளகுறிச்சி, வேலூர் மாவட்டங்களில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு என மொத்தம் ஐந்து மாவட்டங்கள் புதிதாக உருவானது.

இதனையடுத்து, இந்த ஐந்து மாவட்டங்களுக்கும் புதிய கலெக்டர்களும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம், நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கான அரசு ஆணை ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் காலை 9:30 மணிக்கு நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் காணொளி காட்சி வழியாக மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் எண்ணிக்கை 38 ஆக உயர்கிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.