வேளாண் சட்டங்கள் நல்லதா ? கெட்டதா ? விவாதிக்க நான் தயார் – பிரகாஷ் ஜவடேகர்

Default Image

மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக  வெளிப்படையான விவாதத்திற்கு சவால் விடுத்துள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

சென்னையில் நடைபெற்ற  விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டு பேசினார்.அவர் பேசுகையில்,”ராகுல் காந்தி திடீரென்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று கூறுகிறார். வேளாண் சட்டங்கள்  நல்லதா ? கெட்டதா ? என்று ராகுல் காந்தி மற்றும் திமுக-வுடன் விவாதிக்க நான் தயார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியின்  எல்லையில் விவசாயிகள் இன்று 31 வது நாளாக போராட்டம் நடந்தி வருகின்றனர். மத்திய அரசு மற்றும் விவசாயிகள் தலைவர்கள் இடையே பல  கட்ட சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்த நிலையில், எந்தவொரு முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை.மத்திய அரசு தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் , விவசாயிகள் தரப்பில் எந்த  ஒரு பதிலும் இல்லாமல் தான் இருக்கிறது.ஏனெற்றால் அவர்கள் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவது மட்டுமே தீர்வு என்று வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்