ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு, 3 பேர் காயம்.!

Default Image

ஆப்கானிஸ்தான்: காபூலின் பி.டி 6 இன் புல்-இ-சொக்தா என்ற பகுதியில் கடந்த  வியாழக்கிழமை காலை ஒரு வெடிப்பு நிகழ்ந்தது, இதில் மூன்று பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு குறித்து அந்நாட்டு அரசாங்கம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. தற்போது, காபூலில் சாமன்-இ-ஹூசூரி பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்புக்குப் பின்னர் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

கடந்த சில மாதங்களில் ஆப்கானிஸ்தானில் இந்த வன்முறைகள் காணப்படுகிறது. தலிபானுக்கும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் இருந்தபோதிலும் இந்த வன்முறை நடந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்