#BeAlert:கொரோனாவின் மற்றொரு புதிய வடிவம் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு

Default Image

தென்னாப்பிரிக்காவிலிருந்து பயணம் செய்தவர்களில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இந்த வைரஸானது புதிய மாறுபாட்டை அடைந்துள்ளதை பிரிட்டன் கண்டறிந்துள்ளது என்று சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.

“இந்த புதிய வைரஸ் தொற்று இருக்கும் இருவரும் கடந்த சில வாரங்களாக தென்னாப்பிரிக்காவிலிருந்து பயணம் செய்தவர்கள் என்றும்,இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாகவும், கடந்த பதினைந்து நாட்களில் தென்னாப்பிரிக்காவில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தொற்று அதிகரித்துக்கு கொண்டு செல்கிறது.கடந்த வாரம் அங்கு நடைபெற்ற ஆய்வில் வைரஸின் புதிய மரபணு மாற்றம் கண்டறியப்பட்டதாகவும்,இதுதான் தொற்றுநோய்கள் அதிகரித்ததற்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்