இனி ஆதார் கட்டாயம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.!

இனி ஆதார் எண் இருந்தால் மட்டுமே ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

2021-ம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதன்படி, துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர, உதவி ஆணையாளர், துணை பதிவாளர், உதவி இயக்குநர், மாவட்ட அலுவலர் போன்ற பணியிடங்களுக்கான குரூப் I தேர்வு வரும் ஜனவரி 3ம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இனி ஆதார் எண் இருந்தால் மட்டுமே TNPSC ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 1 முதல்நிலை தேர்வு மற்றும் அன்று நடைபெறவுள்ள உதவி இயக்குனர் தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் ஆதார் எண்ணை இணைத்த பிறகே ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்