42 நாட்களுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மிஸ் பெலாரஸ் அழகி..!

Default Image

மிஸ் பெலாரஸ் 2008 அழகியான ஓல்கா கிஷின்கோவா 42 நாட்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

கடந்த நவம்பர் மாதம் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது ஓல்கா கிஷின்கோவா கைது செய்யப்பட்டார். இவருக்கு 12 நாள் சிறைத்தண்டனை இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. அவரது விடுதலைநாள் டிசம்பர் 11 ஆக இருந்தநிலையில், கூடுதலாக ஒன்பது நாட்கள் வழங்கப்பட்டதால் நேற்று விடுதலை ஆனார்.

ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு ஓல்கா கிஷின்கோவா விடுவிக்கப்பட்டார் என்று பெலாரஷ்யன் விளையாட்டு அறக்கட்டளை தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பெலாரஸில் நடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் எதிர்ப்புக்கள் எழுந்தன. மத்திய தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, அலெக்சாண்டர் லுகாஷென்கோ 80.1% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார், இதனால், எதிர்க்கட்சி வேட்பாளரான ஸ்வெட்லானா டிகானோவ்ஸ்கானாவை தோல்வியை தழுவினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்