சட்டமன்ற தேர்தல்: ஐ.டி.சி சோழா ஓட்டலில் இந்திய தேர்தல் ஆணைய உயர்மட்டக்குழு ஆலோசனை.!

Default Image

தமிழக சட்டசபை பதிவிக்கலாம் வரும் மே 24-ம் தேதியுடன் முடிவடைவதை தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்கா தலைமையிலான உயர்மட்ட குழு இன்று தமிழகம் வந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதை தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறது. இதற்காக இந்திய தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்கா தலைமையிலான உயர்மட்ட குழு இன்று தமிழகம் வந்துள்ளது.

துணை தேர்தல் கமி‌ஷனர்கள் சுதீப்ஜெயின், ஆசிஸ்குந்த்ரா, பீகார் தலைமை தேர்தல் அதிகாரி எச்.ஆர்.சீனிவாசா, தேர்தல் ஆணைய இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சவா, தேர்தல் கமி‌ஷன் செயலாளர் மலையாய் மாலிக் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த தேர்தல் ஆணையம் குழுவினர் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா ஓட்டலுக்கு சென்றுள்ளது. அங்கு அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 4 மாத காலமே உள்ளதால் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதா? அல்லது 2 கட்டமாக நடத்துவதா? என்பது குறித்தும் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய உள்ளது. தமிழக சட்டசபை பதிவிக்கலாம் வரும் மே 24-ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்