ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு…! மரக்கன்றுகள் நடும் திட்டத்துக்கு 22 கோடி ஒதுக்கீடு…!!
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் திட்டத்துக்கு 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை, ஏழாயிரம் ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக கூறியுள்ளது. வனத்துறை சார்பில் 7 லட்சம் மரக்கன்றுகளும், ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித்துறை சார்பில், 63 லட்சம் மரக்கன்றுகளும் நட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன்படி 22 கோடியே 46 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. 70 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை பிரதமர் மோடி ஜெயலலிதா பிறந்தநாளில் தொடங்கி வைத்தது குறிப்பிடதக்கது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்..,