உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆத்யநாத் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.எல்.ஏ.-வுக்கு சம்மன்…!

Default Image

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆத்யநாத்  உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ. தனது மகளைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை, காவல்நிலைய விசாரணையில் உயிரிழந்ததையடுத்து சம்பந்தப்பட்ட எம்எல்ஏவுக்கு சம்மன் அனுப்பியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பங்கெர்மாவ் ((Bangermau)) தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ. தன்னை கடந்த ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக இளம்பெண் ஒருவர் புகார் தெரிவித்தார். பாஜக எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறிய அவர், லக்னோவில் உள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இல்லம் அருகே தீக்குளிக்க முயற்சித்தார்.

அப்போது, அவரது தந்தையும் போராட்டம் நடத்தினார். இதையடுத்து, கைது செய்து காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இளம்பெண்ணின் தந்தை, திடீரென உயிரிழந்தார். இதனால், 2 காவல் அதிகாரிகள் மற்றும் 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்கு ஆளான எம்எல்ஏவை விசாரணைக்கு ஆஜராகுமாறு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சம்மன் அனுப்பியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்