மதுபானம் கொடுக்க மறுத்த மணமகனை கத்தியால் குத்திய நண்பர்கள்!

உத்திர பிரதேசத்தில் மதுபானம் கொடுக்க மறுத்த மணமகனை கத்தியால் குத்திய நண்பர்கள். குற்றம் சாட்டப்பட்ட ராம்கிலாடி என்பவரை காவல்துறையினர் கைது  கைது செய்துள்ளனர்.

இன்று திருமணம் என்றாலே நண்பர்களுக்கு பார்ட்டி என்கின்ற பெயரில் நண்பர்களுக்கு மதுபானம் தான் கொடுக்கின்றன. அந்த வகையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தில் கடந்த திங்கள்கிழமை இரவு 28 வயதான நபர் தனது திருமணத்திற்குப் பின் அவர்களை சந்திப்பதற்காக சென்றுள்ளார். அப்பொழுது அவரது நண்பர்கள் கூடுதலாக மது ஊற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

ஆனால் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்து பப்லுவை கத்தியால் குத்தி உள்ளன. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ராம்கிலாடி என்பவரை காவல்துறையினர் கைது  கைது செய்துள்ளனர். மேலும் 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் நடந்த சில மணி நேரங்களில் மணமகன் அவரது நண்பர்களால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.