ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க கோரி பிரசாத் ஸ்டுடியோ மீது இளையராஜா வழக்கு.!

Default Image

இளையராஜா தன்னை பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து வெளியேற்றியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க கோரி பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்கள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இசைஞானி இளையராஜா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் தான் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார்.சமீபத்தில் ஸ்டுடியோவின் உரிமையாளர்கள் இளையராஜாவை வெளியேற்றியதுடன் ,தனது இசை குறிப்புகளை சேதப்படுத்தியதாக கூறி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இளையராஜா அவர்கள் பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து தனக்கு சொந்தமான பொருட்களை கூட எடுக்க விடாமல் வெளியேற்றயது நியாயமில்லை எனவும் , இதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியதாகவும் ,எனவே தன்னை ஸ்டுடியோவில் இருந்து வெளியேற்றியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீட்டு தொகையை ஸ்டுடியோ உரிமையாளர்களான சாய் பிரசாத் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் .மேலும் பிரசாத் ஸ்டுடியோ தன் வசமுள்ள ஒலிப்பதிவு அரங்கில் தலையிடவும் தடை விதித்து வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார் .

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ,பிரசாத் ஸ்டுடியோ இந்த மனு தொடர்பாக பதிலளிக்க கோரி நோட்டீஸ் அனுப்புமாறு உத்திரவிடப்பட்டுள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்