ஸ்டெர்லைட்,காவிரி போராட்டத்தைப் புறக்கணித்த விஷாலின் நெருங்கிய நண்பர்கள்…!

Default Image

சினிமாத்துறையினர் நேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி  போராட்டம் நடத்தினர்.

தென்னிந்திய நடிகர் சங்கம் முன்னெடுத்த இந்தப் போராட்டத்தில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி உள்ள சினிமா அமைப்புகள் பின்னர் இணைந்து கொண்டன.வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கமல், ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, கார்த்தி, விஷால் உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்து கொண்டனர்.

ஆனால், விஷாலின் நெருங்கிய நண்பர்களான ஆர்யா, விஷ்ணு விஷால், உதயநிதி ஸ்டாலின், ஜீவா ஆகியோர் அந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. விஷாலின் நண்பர்கள் குழுவில் இருந்து ஜெயம் ரவி மட்டுமே கலந்து கொண்டார். விஷால் பொறுப்பில் இருக்கும் இரண்டு சங்கங்கள் இணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தில், விஷாலின் நண்பர்களே கலந்து கொள்ளாதது விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்