ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையை தற்போது வெளியிடுவது உகந்ததாக இருக்காது…!அமைச்சர் கடம்பூர் ராஜூ…
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ,ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையை தற்போது வெளியிடுவது உகந்ததாக இருக்காது என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், நீட் நுழைவுத் தேர்வுக்கான உண்டு, உறைவிட பயிற்சி முகாமை அமைச்சர் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு செய்து கொடுத்துள்ளதாக கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.