“கையை வைத்தால் வெட்டப்படும்” ஆ.ராசாவை கடுமையாக விமர்சித்த கடம்பூர் ராஜூ.!

Default Image

ஜெயலலிதா நினைவிடத்தில் கை வைத்தால் கையை வெட்டுவோம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டியலியளித்துள்ளார்.

தூத்துக்குடி: கழுகுமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் செ ராஜூ, ஜெயலலிதாவை பற்றி பேச ஆ.ராசாவிற்கு அருகதையே கிடையாது. காற்றில் கூட ஊழல் செய்ய முடியும் என்று உலகிற்கு நிரூபித்துக் காட்டிய விஞ்ஞானி ஆ ராசா பற்றி இந்த ஊருக்கே தெரியும்.

இப்படிப்பட்ட இழி நிலையில், ஏழரை கோடி மக்கள் இதயத்தில் இருக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை, ஆ ராசாவிற்கு நாவடக்கம் வேண்டும். உலகத் தத்துவங்களை ஆ.ராசா பேசுகிறார். அதைவிட பேச எங்களுக்கும் பேச தெரியும். முதல்வர் ஜெயலலிதா சமாதியில் ஏதோ ஓர் எழுத்து எழுதுவோம், இடிப்போம் என்று பேசுகிறார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் கைவைத்தால் கை வெட்டப்படும். வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் புரட்சித்தலைவி பற்றி இழிவாகப் பேசி கொண்டிருக்கும் நேரத்திலேயே ஒரு ராஜா அல்ல ஓராயிரம் ராசா வந்தாலும் இருக்கின்ற இடம் தெரியாமல் அழிந்து போவார்கள் என்று கடுமையாக விமர்சித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்