போஸ்டரில் இவர்கள் போட்டோ இருக்கக்கூடாது – ரஜினி மக்கள் மன்றம் உத்தரவு.!

போஸ்டரில் அர்ஜுனமூர்த்தி, தமிழருவி மணியன் புகைப்படங்கள் இருக்கக்கூடாது என்று நிர்வாகிகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் உத்தரவு.

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். புதிதாக தொடங்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பரையும், கட்சியின் மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனையும் நியமனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், கட்சி தொடர்பான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒட்டப்படும் போஸ்டர்களில் அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன், மாநில நிர்வாகி சுதாகர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெறக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ரஜினி புகைப்படத்துடன் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில் பெங்களூரில் உள்ள தனது அண்ணன் சத்யநாராயணாவை சந்தித்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்