உற்சாக மிகுதியால், நடனமாடிய பெண்களுக்கு பணத்தை வாரி வழங்கிய போலீஸ்!
நடன நிகழ்ச்சியின்போது உத்தரபிரதேச மாநிலம் இன்னாவில், மேடையில் நடனமாடிய பெண்களுக்கு போலீஸ்காரர் ஒருவர், பணத்தை வாரி வழங்கிய காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்னாவில், நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், நடனத்தின் போது உற்சாக மிகுதியால், மேடையில் நடனமாடிய பெண்களுக்கு பணத்தை வாரி வாரி இரைத்தார்.
இதனை, அங்கிருந்த நபர் படம்பிடித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், நடனத்தின்போது உற்சாக மிகுதியால், இதுபோன்று செயலில் ஈடுபட்ட அந்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.