நாளைய போட்டியில் இந்திய அணியில் மாற்றம் வருமா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Default Image

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அபாரமாக விளையாடி இந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா, சைனி, சாஹல் ஆகியோரின் ஓவரிகளை ஆஸ்திரேலிய வீரர்கள் அடித்து நொறுக்கினர்.

ஷமி மட்டும் ஓரளவு ரன்களை கட்டுப்படுத்தினார். பேட்டிங்கில் ஹர்திக் பாண்டியா, தவான் இருவர் மட்டுமே சிறப்பாக விளையாடினர். கேப்டன் கோலி, மயங்க் அகர்வால், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தனர். முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் நாளை களமிறங்கியுள்ளது. இரண்டாவது போட்டியில் எந்தவித மாற்றமும் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணி தோல்விக்கு காரணம் சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே அணியில் தேர்வு தான் எனவும் ஆஸ்திரேலிய வீரர்கள் பும்ரா,சைனி மற்றும் சாஹல் ஆகியோர் ஓவரிகளில் ரன் சேர்ந்தபோது, இந்திய அணியில் புதிய பந்துவீச்சாளரை பந்து வீச்சாளர் இல்லை.

அதனால், அவர்களுக்கே மீண்டும், மீண்டும் பந்து வீச வைக்க வேண்டிய கட்டாயத்தில் கோலி இருந்தார். மேலும், ஒரே ஒரு ஆல்-ரவுண்டராக ஜடேஜா மட்டுமே இடம் பெற்று இருந்தார் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்