ஹாங்காங் அரசுக்கு நீரவ் மோடியை கைது செய்ய கோரிக்கை …!

Default Image

இந்தியா  பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடியை கைது செய்ய ஹாங்காங் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மாநிலங்களைவையில், வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே. சிங் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி தொடர்பாக நீரவ் மோடியையும், அவரது உறவினர் மெஹூல் சோக்சியையும் தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மோசடி தொடர்பாக ரிசர்வ் வங்கியைச் சேர்ந்த 4 அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், தற்போது ஹாங்காங்கில் உள்ள நீரவ் மோடியை கைது செய்வது குறித்து அந்நாட்டு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்