வெறும் 102 போட்டிகளை ரூ 6,138 கோடிக்கு ஏலத்தில் எடுத்த ஸ்டார் நிறுவனம்…!உலக அளவில் இது அதிகபட்ச தொகையாகும்…!

Default Image

இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது.ரூ 6,138 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஸ்டார் நிறுவனம். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான ஏலத்தில் இதுவே அதிகபட்ச தொகையாகும்.2018-2023 வரைக்குமான ஒப்பந்தமாகும் இது.

Image result for ஐபிஎல்  ஒளிபரப்பும் உரிமை ஸ்டார் நிறுவனம்

இதன் மூலம் இந்திய கிரிக்கெட்டின் இரண்டு பணமழை உரிமைகளை ஸ்டார் இந்தியா பெற்றுள்ளது, ஒன்று ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பு உரிமை, இதனை கடந்த செப்டம்பர் 2017-ல் ரூ.16,347 கோடிக்கு தட்டிச் சென்றது. ஐபிஎல் ஒப்பந்தம் 2018-22 வரை உள்ளது.

இதற்கு முன்பாக இந்திய கிரிக்கெட் உரிமைகளை 2012-18 என்ற ஆறாண்டுகளுக்கு ஸ்டார் இந்தியா பெற்ற போது ரூ.3851 கோடி கொடுத்து ஒப்பந்தம் பெற்றது, இப்போது 59% கூடுதலாக அளித்துள்ளது.

Image result for ஐபிஎல்  ஒளிபரப்பும் உரிமை ஸ்டார் நிறுவனம்

தற்போது பெற்றுள்ள இந்திய கிரிகெட் உரிமைகளின் படி போட்டி ஒன்றுக்கு ஆகும் செலவு ரூ.60 கோடியாகும். ஐபிஎல் போட்டிகளில் ஒரு போட்டிக்கான ஒளிபரப்பு உள்ளிட்ட உரிமைக்கான செலவுகள் ரூ.54.5 கோடியாகும்.

அடுத்த 5 ஆண்டுகளில் ஸ்டார் இந்தியா ஆடவர் இந்திய கிரிக்கெட்டின் 102 போட்டிகளை ஓளிபரப்புகிறது. மேலும் இந்திய உள்நாட்டுப் போட்டிகளுக்கான உரிமைகள் மற்றும் மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான உரிமைகளும் அடங்கும்.

முதன் முறையாக இதற்கான ஏலம் இ-ஆக்‌ஷனாக நடத்தப்பட்டது, விளையாட்டில் இத்தகைய இ-ஆக்‌ஷன் இதுவே முதல் முறையாகும். இந்த இ-ஆக்‌ஷனில் ஸ்டார் இந்தியா, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க், ரிலையன்ஸ் போன்ற ஜாம்பவான்கள் போட்டியில் இறங்கினர். இதில் ஸ்டார் இந்தியா மீண்டும் ஒப்பந்தங்களை வென்றுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்