“ அரியர் தேர்வை ரத்து செய்ய அதிகாரம் உள்ளது “ – தமிழக உயர் கல்வித்துறை

Default Image

மாணவர்களின் நலன் கருதி அரியர் தேர்வை ரத்து செய்ய பல்கலைக்கழங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பட்டப் படிப்புக்களுக்கு இறுதிப் பருவத்தேர்வு தவிர, மற்ற பருவ தேர்வுகள் ரத்து செய்வதாகவும், அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் உத்தரவிற்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்பட 2 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுவின் விசாரணையில், அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி யூஜிசி விதிகளுக்கு புறம்பானது என்று  ஏஐசிடிஇ திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது.

இதனிடையே  தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் சார்பில்  பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில்,மாணவர்களின் நலன் கருதி அரியர் தேர்வை ரத்து செய்ய பல்கலைக்கழங்களுக்கு அதிகாரம் உள்ளது. அனைத்து  பல்கலைக்கழங்களுடன் ஆலோசித்து தான் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது UGC விதிகளுக்கு முரணானது இல்லை.எனவே இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்