நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார் ..!பாலாஜிக்கா?மக்களுக்கா கூறுகிறார் கமல்.!

Default Image

நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார் என்று மறைமுகமாக பாலாஜிக்கு கூறுகிறாரா அல்லது மக்களுக்கு சொல்கிறாரா கமல்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிறன்று கமல்ஹாசன் தோன்றி அந்த வாரம் முழுவதும் நடந்ததை வைத்து போட்டியாளர்களை வச்சு செய்வது வழக்கம் .அது மட்டுமின்றி நாமினேஷனில் இருப்பவர்களில் சிலரும் வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்பட்டு, குறைவான வாக்கை பெற்ற நபர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் .

ஒவ்வொரு வாரமும் மறைமுகமாக போட்டியாளர்களை கூறுவது போன்று அரசியல் பேசி விடுவார் . அந்த வகையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தோன்றி,நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்’, என்று கூறியதோடு, ‘நீங்கள் விழிப்புடன் இருந்தால் மாற்றங்கள் வரும். உங்கள் ஓட்டு என்னென்ன மாற்றங்களை உருவாக்க போகிறது என்பதை பார்க்கலாம் என்று கூறுகிறார்.

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலா தூங்கியதற்காகவும் ,பல டாஸ்குகளில் கலந்து கொள்ளாமல் இருந்ததற்காகவும் நேற்றைய தினம் ஓய்வு அறையில் தங்கியிருந்தார் .அவரை தான் கமல்ஹாசன் மறைமுகமாக சொல்கிறாரா அல்லது வரும் சட்டப்பேரவை தேர்தலுக்காக மக்களிடம் கூறுகிறாரா என்பது அவருக்கு தான் தெரியும் .

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்