IPL 2018:மும்பையை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி …!போட்டிக்குத் தயாரான சூப்பர் கிங்ஸ்…!

Default Image

வரும் 7-ம் தேதி ஐபிஎல் போட்டிகள்  தொடங்கப்படவுள்ளன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்  எதிர் கொள்கின்றனர்.

வரும் ஏப்ரல் 7-ம் தேதி 11-வது ஐபிஎல் சீசன் போட்டி தொடங்குகிறது. சூதாட்ட சர்ச்சை காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டு இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு விளையாட வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சி மற்றும் முதல் போட்டி நடைபெறவுள்ள மும்பைக்கு இன்று  சென்னையிலிருந்து விமான நிலையம் புறப்பட்டனர்.

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை வீரர்கள் சந்திக்கின்றனர்.தொடக்க நிகழ்ச்சியை பிரம்மாண்ட முறையில் நடத்த ஐபில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரன்வீர் சிங், வருண் தவான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் நடனம் ஆட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்