‘செல்வமுருகன் திருடரல்ல’ – செல்வமுருகன் மீது பொய் வழக்கு பதிவு! வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட வேல்முருகன்!

Default Image

செல்வமுருகன் மரணம் விவகாரத்தில், வீடியோ ஆதாரங்கள் வெளியிட்ட வேல்முருகன். 

விருத்தாசலம் சிறையில் அடைக்கப்பட்ட செல்வமுருகன் மீது பொய்வழக்கு போடப்பட்டதாக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்  குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், செல்வமுருகன் நெய்வேலி நகர போலீசாரால், கடந்த 30-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விருத்தாசலம் சிறையில் அடைக்கப்பட்ட போது, அங்கு அவருக்கு வெட்டு வந்ததாகவும், அதன் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆனால், அவர் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், செல்வமுருகன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அவர் வழிப்பறி திருடனல்ல, வளர்ந்து வரும் கிராம தொழிலதிபர். செல்வமுருகன் மீது திட்டமிட்டு திருட்டு வழக்கு பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது. செல்வமுருகன் விவகாரத்தில் ஆதாரங்கள் இருந்தும், தவறு இழைத்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி மறுக்கிறார் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வேல்முருகன், செல்வமுருகன் வழிப்பறி திருடனல்ல என்று நிரூபிக்கும் வகையில், வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். வியாபாரி செல்வமுருகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் ஏற்கனவே விசாரணை மேற்கொண்டு வருகிற நிலையில்,  வேல்முருகன் வெளியிட்ட வீடியோ ஆதாரங்களை கைப்பற்றி, மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்