மரணப் படுக்கையிலும் பதிப்பை தவமாக கொண்டு பணியாற்றியவர் .!க்ரியா மறைவிற்கு ஸ்டாலின் இரங்கல் .!

Default Image

மரணப் படுக்கையிலும் பதிப்பை தவமாக கொண்டு பணியாற்றியவர் க்ரியா என்று கூறி அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலை மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் பதிப்புத் துறையில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கியவர் பதிப்புலக ஆளுமை க்ரியா ராமகிருஷ்ணன் தமிழ் பதிப்பாளரும் , தமிழ் நவீன அகராதியான க்ரியா பதிப்பின் உரியையாளருமாவர். சமீபத்தில் இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மரண படுக்கையிலும் சுவாச கருவி பொருத்தியவாறு அவர் தனது க்ரியா அகராதியின் 3-ம் பதிப்பினை திருத்தி , அதன் திருத்தப்பட்ட பதிப்பினை இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார் .  76 வயதான இவர் சிகிச்சை பலனிற்றி  உயிரிழந்துள்ளார் . அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்

அந்த வகையில் தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். அதில் தமிழ் பதிப்புலகத்தின் முக்கிய ஆளுமையான க்ரியா ராமகிருஷ்ணன் மறைவுவேதனையை தருகிறது. பதிப்பை தவமாக கொண்டு மரணப் படுக்கையிலும் பணியாற்றியவர். அவர் வெளியிட்ட ‘தற்காலத் தமிழ் அகராதி’ அரிய கருவூலம் . குடும்பத்தினர் மற்றும் தமிழ் பதிப்புலகத்தினர் அனைவருக்கும் என்னுடைய இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் .

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்