ஈராக் : மொசுலில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 38 பேரின் உடல்கள் இந்தியா கொண்டு வரப்பட்டன…!

Default Image

மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் ஈராக் சென்று அந்நாட்டு அரசு உதவியுடன் விமானம் மூலம் 38 பேரின் உடல்களை கொண்டு வந்தார். ஈராக்கின் மொசூல் நகரில் பணிபுரிந்து வந்த இந்திய தொழிலாளர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர்.

அவர்களை மீட்க இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததால், 39 இந்தியர்களும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுவிட்டதாக, கடந்த 20ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்தார். இதனால், 39 இந்தியர்களின் உடல்களை மீட்டுக் கொண்டுவருமாறு அவர்களது உறவினர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, நேற்று டெல்லியில் இருந்து ஈராக் சென்ற வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங்,இன்று அந்நாட்டு அரசு உதவியுடன் விமானம் மூலம் 38 பேரின் உடல்களை கொண்டு வந்தார்.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்