தி.மு.கவினர் கோவையில் தீக்குளிக்க முயற்சி….!போலீசார் தடுத்து நிறுத்தம் ….!

தி.மு.கவினர் இருவர்  கோவையில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. முக்கியமாக தமிழக எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கண்டித்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம், சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டையில் எம்.எல்.ஏ சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற சாலைமறியலில் தி.மு.கவினர் பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என தி.மு.க அறிவித்துள்ளது.

 கோவை பீளமேடு பகுதியில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.கவினர் இருவர் தீக்குளிக்க முயற்சி செய்தனர். முருகேசன், சிங்கை சதாசிவம் ஆகிய இருவரும் தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். உடனே அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க நிர்வாகி தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment