குறையும் கொரோனா தொற்று – இந்தியாவில் புதிய பாதிப்புகள் எவ்வளவு?

இந்தியாவில் புதியதாக கொரோனாவால் 48 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டே தான் செல்கிறது. சில இடங்களில் தீவிரம் அதிகரித்தாலும் பல இடங்களில் குறைவாக தான் உள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 8,684,039 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 128,165 பேர் உயிரிழந்துள்ளனர். 8,064,548 பேர் குணமடைந்துள்ளனர். அதாவது, பாதிக்கப்பட்டவர்களில் 90% பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக 48,285 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 550 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனையில் 491,326 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலை முற்றிலுமாக மாற நாம் சமூக இடைவெளியை கடைபிடித்து விழிப்புடன் இருப்போம்.