கொரோனாவால் வேலையிழந்த விமானியின் நூடில்ஸ் கடை! அப்படி என்ன ஸ்பெஷல்?

Default Image

கொரோனாவால் வேலையிழந்த விமானியின் நூடில்ஸ் கடை.

கடந்த 8 மாத காலமாக உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இயல்புநிலை திரும்பி வந்தாலும், இந்த ஊரடங்கால், வேலையிழந்த மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக தான் உள்ளது.

ஆனால், வேலையிழந்த பலர் மற்ற வேலைகளை தேடி செல்கின்றனர். அந்த  வகையில், மலேசியாவில் கொரோனா அச்சுறுத்தலால் வேலையிழந்து விமானி ஒருவர் நூடுல்ஸ் கடை ஒன்று தொடங்கி உள்ளார்.

மலிண்டோ ஏர் விமான நிறுவனத்தில் பணிபுரிந்த 2  ஆயிரம் ஊழியர்களை அந்நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது. இந்த 2 ஆயிரம் பேரில், விமானி அஸ்ரின் மொஹமட் சவாவியும் ஒருவர். இவருக்கு 4 குழந்தைகள் உள்ள நிலையில், விமானி அஸ்ரின் மொஹமட் சவாவி, மனம் தளராமல், தலைநகர் கோலாலம்பூரில் சிறிய நூடில்ஸ் கடை ஒன்றை தொடங்கியுள்ளார்.

இந்த கடையில் அவர் வியாபாரம் செய்யும் பொது, விமான  கேப்டனின் உடை அணிந்திருப்பதால், இவரது உடை பலரின் கவனத்தை ஈர்த்தது. மேலும், இவரது கடையில் தயாராகும் உணவுகள் சுவையுடன் காணப்படுவதால் மக்கள் மத்தியில் இக்கடை பிரபலமடைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்