கமல்நாத்தின் கருத்துக்கு மக்கள் தகுந்த பதிலை அளித்துள்ளனர்- இமார்டி.!

Default Image

மத்திய பிரதேசத்தில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக நடைபெற்ற பிரசாரத்தின்போது தாப்ரா தொகுதியில் போட்டியிட்ட  மாநில அமைச்சரும், பாஜக வேட்பாளருமான இமர்தி தேவி குறித்து அப்போது கமல்நாத் அவதூறாக பேசினார். அது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால், மத்திய பிரதேச பாஜக தலைவர்கள், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், கமல்நாத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து, கமல்நாத்திற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்  விளக்கமளிக்க அனுப்பியது.

இந்நிலையில், இன்று மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. பாஜக வேட்பாளர் இமார்டி தேவி தாப்ரா தொகுதியில் முன்னிலை வகித்துள்ளார். இது குறித்து கூறிய  இமார்டி தேவி, “முன்னாள் முதல்வர் கமல்நாத் எனக்கு எதிராக அவர் பயன்படுத்திய தவறான வார்த்தைக்கு மக்கள் தகுந்த பதிலை அளித்துள்ளனர் என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்