#HeavyRain: நவ.,11 மற்றும் 12ம் தேதி இந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

நாளை  மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது  என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நாளை, வடகிழக்கு பருவமழையானது திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், வருகின்ற நவ.,12 ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வில்லுபுரம், புதுச்சேரி, கடலூர், காரைக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.