WT20: கோப்பையை கைப்பற்றிய ஸ்மிருதி மந்தனா படை..!

Default Image

பெண்களுக்கான டி20 தொடர் துபாயில் நடைபெற்றது. இன்றைய இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் நோவாஸ் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இப்போட்டியில் முதலில் இறங்கிய டிரெயில் ப்ளேஸர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக தியான்ட்ரா , ஸ்மிருதி மந்தனா இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே நிதானமாக விளையாடி வந்த தியான்ட்ரா 20 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் இறங்கிய அனைத்து வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் வெளியேற கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடி 68 ரன்கள் குவித்தார். இறுதியாக டிரெயில் ப்ளேஸர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 118 ரன்கள் எடுத்தனர்.

119 ரன்கள் இலக்குடன் சூப்பர் நோவாஸ் அணியின் தொடக்க வீராங்கனையாக  ஜெமிமா, சாமரி இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே சாமரி  6 ரன்னில் வெளியேற பின்னர் இறங்கிய தனியா பாட்டியா 14 ரன் எடுத்து பெவிலியன் சென்றார்.

இதைத்தொடர்ந்து இறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சிறப்பாக விளையாடி 30 ரன்கள் குவித்தார். பின்னர் இறங்கிய அனைத்து வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக சூப்பர் நோவாஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 102 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்