தமிழகத்தில் நவ.,10-ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும்- திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தலைவர் அறிவிப்பு.!

Default Image

தமிழகத்தில் நவ.,10-ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி 50% இருக்கைகளுடன் திரையரங்குகளும் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனால் தீபாவளிக்கு புது படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் விபிஎப் கட்டணம் செலுத்த எதிர்ப்பு தெரிவித்து திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படாது என்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது . அதற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் படத்தின் வசூலில் 50% -ஐ அளித்தால் விபிஎப் கட்டணத்தை கைவிடுவதாக அறிவித்தனர் .

இந்த விபிஎப் கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்த இருதரப்பினர் இடையே தொடர்ந்து நடந்து வரும் நிலையில் தற்போது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்பரமணியம் தமிழகத்தில் திரையரங்குகள் வரும் 10-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும்,  தியேட்டரில் தங்களிடம் உள்ள பழைய வெற்றி திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளதாகவும் கூறினார் .

மேலும் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர் இடையே விபிஎப் கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்த தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்  அதற்கான முடிவு நாளை அல்லது நாளை மறுநாள் தயாரிப்பாளர்கள் தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் திரையரங்குகளை  10-ஆம் தேதி முதல்  திறக்கவுள்ளதாக  திருப்பூர் சுப்பரமணியம் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்