அதிபர் தேர்தலில் வெற்றி பெற போகிறேன்! – ஜோ பைடன்

அதிபர் தேர்தலில் வெற்றி பெற போவதாக ஜோ பைடன் பேட்டி.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல், கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து, வாக்கு என்னும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ட்ரம்ப் அவர்கள் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்தது.

இதனையடுத்து, ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலையில், உள்ள நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற போவதாகவும், அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் நமது வெற்றியை உறுதிப்படுத்துகிறது. மேலும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெரும் வரை தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.’ ஜோ பைடன் அவர்கள், 264 தேர்தல் சபை வாக்குகளை பெற்றுள்ள நிலையில், வெற்றிபெற 6 இன்னும்  வாக்குகளே தேவைப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.