பிரபல தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி அலிபாக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அலிபாக் பகுதியை சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர் அன்வை நாயக், கடந்த 2011 ஆம் ஆண்டு தனது தாயாருடன் தற்கொலை செய்து கொண்டார். அந்த தற்கொலைக்கு அர்னாப் கோஸ்வாமி, பெரோஸ் ஷேக் மற்றும் நித்தீஷ் சர்தா தான் காரணம் எனவும், அவர்கள் தனக்கு தரவேண்டிய 5.40 கோடி ரூபாய் தராததால் தற்கொலை செய்யப்போவதாக அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.
இதன்காரணமாக 2018 ஆம் ஆண்டில் தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் கோஸ்வாமியிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த வழக்கு 2019 ஆம் ஆண்டு முடித்து வைக்கப்பட்டது. இந்த வழக்கை மும்பை போலீசார் கையில் எடுத்த நிலையில், சுஷாந்த் சிங் மற்றும் டி.ஆர்.பி. வழக்குகளை முன்வைத்து, அர்னாப் கோஸ்வாமியின் வீட்டில் நுழைந்து, அவரை கைது செய்தனர்.
மேலும் அர்னாப் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அலிபாக் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை போலீசார் தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், வலுக்கட்டாயமாக தன்னை இழுத்து சென்றதாகவும் புகாரளித்துள்ளார்.
இந்நிலையில், அர்னாப் கோஸ்வாமியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி அலிபாக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனு, நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.