இன்று மாலை இந்தியா வரும் 3 ரஃபேல் போர் விமானங்கள்.!

Default Image

பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு 3 ரஃபேல் போர் விமானங்கள் இன்று மாலை வந்தடையும். 

சீனா மற்றும் இந்தியா எல்லையான கிழக்கு லடாக்கில் நாளுக்கு நாள் பதட்டம் அதிகரித்து வருகிறது. அதற்காக இந்தியா வான்படையை வலுப்படுத்த ஏற்கனவே ரஃபேல் போர் விமானங்களை வாங்கி விமானப் படையில் இணைக்க திட்டமிட்டிருந்தது. அதன்படி கடந்த 2016-ல் இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தப்படி 36ரஃபேல் ஜெட் விமானங்களை ரூ.59,000 கோடி செலவில் இந்தியா  வாங்கியுள்ளது.

அதன் முதல் கட்டமாக கடந்த ஜூலை 28-ம் தேதி 5 ரஃபேல் விமானங்கள் இந்தியாவை அடைந்து செப்டம்பர் 10-ம் தேதி விமானப்படையில் இணைக்கப்பட்டது. இந்த நிலையில்  மேலும் 3 ரஃபேல் விமானங்கள் இன்று பிரான்சில் இருந்து இந்தியா புறப்பட்டு மாலையில் ஹரியானாவின் அம்பாலா விமான நிலையத்தை வந்தடையும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த 3 விமானங்களையும் மேற்கு வங்கத்தில் உள்ள ஹசிம்மரா விமானப்படையில் இணைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்