பல கட்டுப்பாடுகளுடன் ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு!

Default Image

பல கட்டுப்பாடுகளுடன் ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, பல மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

 ஆந்திர மாநிலத்தில், 8 மாதங்களுக்கு பின் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 9-12ம்  வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மாணவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கல்லூரிகளிலும் குறைந்த அளவு மாணவர்களை வைத்தே பாடம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது, வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே மாணவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
mkstalin
udit narayan kiss controversy
Gold Rate
shivam dube hardik pandya
d jayakumar
DMK MP TR Baalu - BJP State president Annamalai - Congress MLA Selvaperunthagai