14 கோடிக்கு சொந்தக்காரி, ஆனால் பிச்சைக்காரி – எகிப்தில் கைதுசெய்யப்பட்ட பெண்மணி!

Default Image

14 கோடிக்கு சொந்தக்காரி, ஆனால் பிச்சைக்காரி – எகிப்தில் கைதுசெய்யப்பட்ட பெண்மணி.

பிச்சைக்காரர்கள் என்றால் குடும்ப வறுமை காரணமாகவோ அல்லது குழந்தைகளுக்காக, ஒதுக்கப்பட்ட நிலைமையில் இருந்தாலோ தான் அந்த தொழிலை செய்ய வருவார்கள். ஆனால், பல கோடிகளுக்கு சொந்தக்காரர்களாக இருந்தும் பிச்சை எடுக்க இங்கு ஒரு பெண்மணி வந்துள்ளார். எகிப்து நாட்டை சேர்ந்த 57 வயதுடைய நபீஷா எனும் இப்பெண்மணி 5 சொந்த வீடுகளை கொண்டவர்.

எகிப்து மதிப்பில் 3 பில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களையும், இந்திய மதிப்பில் 1.4 கோடிக்கும் அதிகமாக சொத்துக்களை கொண்டவர். ஆனால், இவர் தெரு ஓர பிச்சைக்காரி. இவர் குறித்து தகவலறிந்து போலீசார் விசாரித்ததில் இவை அனைத்தும் உண்மை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த பெண்ணை தற்பொழுது கைது செய்துள்ள போலீசார் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர் படுத்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்